ramanicom உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

கவிதைகள்


ஒளியை அறியாக்காரிருளிலும்
உன் உருவம் மட்டும் தெரிகிறது
உன் நினைவுகள் எனக்குள் இருந்து
இதயத்தை நெருப்பாய்ச் சுடுகிறது...
-by rajinthan.a

இனியதாய்ப் பழகி
இலகுவாய்ப் பிரிந்தாலும்
இனியவள் உன் நினைவுகள்
இணைபிரியாது என்றும் என்னுடன்...
-by rajinthan.a

விழித்திருக்கும் போது
உறங்கும் உன் நினைவுகள்
இரவில் விழித்துக்கொண்டு
கனவில் எனைக் காயம் செய்கிறது...
-by rajinthan.a

கடன் வாங்கியேனும்
கவிதை சொல்வேன்
என் காதலை நீயும் ஏற்றுக்கொண்டால்
நானும் ஓர் கவிஞனாவேன்....
-by rajinthan.a

நிலவும் உனைக்
காதல் செய்திருக்கும் போலிருக்கிறது
அதனால்தான்
உனைக்கண்டு வளர்வதும்
காணாமல் தேய்வதுமாய்
சில நாள் வளர்ந்தும்
சில நாள் தேய்ந்தும்
வாழ்கிறது எனைப்போல.....
-by rajinthan.a

முதல் முறையாய் உன்விம்பம்
என் கண்ணில் வீழ்ந்தபோது
கவிதை வடித்தது நெஞ்சம்
இறுதியாய் உன் விம்பம்
என் கண்ணில் வீழ்ந்தபோது
கண்ணீர் வடித்தது இதயம்....
-by rajinthan.a

உனக்கென இரவானவன்
உன் வம்பம் தாங்கும் நீரானவன்
நிலவென நீயானதும்
உன்னால் தொலைவானவன்- நான்....
-by rajinthan.a

காதலியே
உனக்கு முன்பே
நான் இறந்துவிடவேண்டும்
ஏனெனில்
மறுபிறப்பிருந்தால்
உனக்குமுன்பே நான் பிறந்துவிடவேண்டும்
அப்போதும் உனையே காதலிக்க...
-by rajinthan.a

விழித்திருக்கும் இரவுகளில்
விழிதிறக்கும் கனவுகளே
விழிதிறக்கும் கனவுகளில்
விழி இமைக்குள் உன் நினைவுகளே..
-by rajinthan.a

நீ விலகியதேன் எனைவிட்டுத் துரமடி
உன் நினைவுகள்தான் என்னில் பாரமடி
உன் கனவுகள் எல்லை மீறுதடி
உன் சுவடுகள் மட்டுந்தான் மீதமடி...
-by rajinthan.a

நிலவின் வதனம்
மலரின் மௌனம்
மின்னலின் பார்வை
உன்னிடம்...
-by rajinthan.a

கண்களைத் தொலைபேசியாக்கும்
உன் இதயம் என்ன சிம்காட்டா...
-by rajinthan.a

என் மனமெனும் மலர்மீது
வீழ்ந்த பனித்துளி நீயானாய்
உன் வாசம் வீசும்
தென்றல்காற்றானேன் நான்...
-by rajinthan.a

உனைத்
தென்றல்காற்றே
என்று வர்ணித்தேன்-அதனால்தான்
எனைத்தொட்டுவிட்டு
தூரச் சென்றுவிட்டாய்
வண்ணநிலவே என்று வர்ணித்தேன்
அதனால்தான் இன்னும்
எட்டாத்தூரத்திலிருக்கின்றாய்...
-by rajinthan.a

உன்னைக் கண்கள் பார்த்தபோது
இதயம் காதலைச் சுமந்ததும்
உன்னைக் காதல் செய்தபோது
கண்கள் கனவுகளைச் சுமந்ததும்
உனக்காகக் காத்திருந்தபோது
கரங்கள் கவிதைகளைச் சுமந்ததும்
உன்னில் இருந்து தொலைவானபோது
நெஞ்சம் உன் நினைவுகளைச் சுமப்பதும்
என்னில் என்றும் சுகமான சுமைகளே....
-by rajinthan.a

நிஐமாய் இருந்து நிழலாய்த் தொடர்ந்த எனை
நிஐமாய்த் தொடரும் நிழலாக்கியவள்-நீ...
-by rajinthan.a