ஒளியை அறியாக்காரிருளிலும் உன் உருவம் மட்டும் தெரிகிறது உன் நினைவுகள் எனக்குள் இருந்து இதயத்தை நெருப்பாய்ச் சுடுகிறது... -by rajinthan.a இனியதாய்ப் பழகி இலகுவாய்ப் பிரிந்தாலும் இனியவள் உன் நினைவுகள் இணைபிரியாது என்றும் என்னுடன்... -by rajinthan.a விழித்திருக்கும் போது உறங்கும் உன் நினைவுகள் இரவில் விழித்துக்கொண்டு கனவில் எனைக் காயம் செய்கிறது... -by rajinthan.a கடன் வாங்கியேனும் கவிதை சொல்வேன் என் காதலை நீயும் ஏற்றுக்கொண்டால் நானும் ஓர் கவிஞனாவேன்.... -by rajinthan.a நிலவும் உனைக் காதல் செய்திருக்கும் போலிருக்கிறது அதனால்தான் உனைக்கண்டு வளர்வதும் காணாமல் தேய்வதுமாய் சில நாள் வளர்ந்தும் சில நாள் தேய்ந்தும் வாழ்கிறது எனைப்போல..... -by rajinthan.a முதல் முறையாய் உன்விம்பம் என் கண்ணில் வீழ்ந்தபோது கவிதை வடித்தது நெஞ்சம் இறுதியாய் உன் விம்பம் என் கண்ணில் வீழ்ந்தபோது கண்ணீர் வடித்தது இதயம்.... -by rajinthan.a உனக்கென இரவானவன் உன் வம்பம் தாங்கும் நீரானவன் நிலவென நீயானதும் உன்னால் தொலைவானவன்- நான்.... -by rajinthan.a காதலியே உனக்கு முன்பே நான் இறந்துவிடவேண்டும் ஏனெனில் மறுபிறப்பிருந்தால் உனக்குமுன்பே நான் பிறந்துவிடவேண்டும் அப்போதும் உனையே காதலிக்க... -by rajinthan.a |
விழித்திருக்கும் இரவுகளில் விழிதிறக்கும் கனவுகளே விழிதிறக்கும் கனவுகளில் விழி இமைக்குள் உன் நினைவுகளே.. -by rajinthan.a நீ விலகியதேன் எனைவிட்டுத் துரமடி உன் நினைவுகள்தான் என்னில் பாரமடி உன் கனவுகள் எல்லை மீறுதடி உன் சுவடுகள் மட்டுந்தான் மீதமடி... -by rajinthan.a நிலவின் வதனம் மலரின் மௌனம் மின்னலின் பார்வை உன்னிடம்... -by rajinthan.a கண்களைத் தொலைபேசியாக்கும் உன் இதயம் என்ன சிம்காட்டா... -by rajinthan.a என் மனமெனும் மலர்மீது வீழ்ந்த பனித்துளி நீயானாய் உன் வாசம் வீசும் தென்றல்காற்றானேன் நான்... -by rajinthan.a உனைத் தென்றல்காற்றே என்று வர்ணித்தேன்-அதனால்தான் எனைத்தொட்டுவிட்டு தூரச் சென்றுவிட்டாய் வண்ணநிலவே என்று வர்ணித்தேன் அதனால்தான் இன்னும் எட்டாத்தூரத்திலிருக்கின்றாய்... -by rajinthan.a உன்னைக் கண்கள் பார்த்தபோது இதயம் காதலைச் சுமந்ததும் உன்னைக் காதல் செய்தபோது கண்கள் கனவுகளைச் சுமந்ததும் உனக்காகக் காத்திருந்தபோது கரங்கள் கவிதைகளைச் சுமந்ததும் உன்னில் இருந்து தொலைவானபோது நெஞ்சம் உன் நினைவுகளைச் சுமப்பதும் என்னில் என்றும் சுகமான சுமைகளே.... -by rajinthan.a நிஐமாய் இருந்து நிழலாய்த் தொடர்ந்த எனை நிஐமாய்த் தொடரும் நிழலாக்கியவள்-நீ... -by rajinthan.a |